arul aeraalam peyyattum அருள் ஏராளம் பெய்யட்டும்
அருள் ஏராளம் பெய்யட்டும்
1.அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே
2.அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பரிப்புமாம்
3.அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன்
4.அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே!
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே!