athikaalai naeram aantavar samuukam சுவிசேஷம் பரவட்டும்
சுவிசேஷம் பரவட்டும்
1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்
2. வடதிசை வாழும் என் குடும்பம்
உடன் என் நினைவில் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார்
3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்
4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்