athikalaiyil um anbai அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்
அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்
அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)
என் தேவனே உம் கிருபை பெரிதையா
உம் கைகளில் என்னை வரைந்தீரையா
என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா
பாவங்கள் பலகோடி நான் செய்தேனே
தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே
உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்
உம் உயிரை எனக்கென தந்தீரே (2)
பாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரே
புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே
வாழ்கிறேன் உம் கிருபையினால்
என்னை உம் அன்பால் அணைத்தீரே (2)