athisayamaanavar aalosanai அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
நித்திய தேவனே என் இயேசுவே
1.சோதனை புரண்டு
என் மேல் உருண்டாலும்
சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே
ஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல்
சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம்
பெலனீந்தாரே ஆனந்த கீதம் பாடிட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
3.துன்பம் தொல்லையும் கவலையும்
வியாதியும் தொடர்ந்து வந்தாலும்
தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்