athisayamai nammai அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்
தேசமே பயப்படாதே
தேவன் பெரிய காரியம் செய்வார்
இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே
மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார்
கண்ணீரால் கழுவிடுவோம் இயேசுவின் பாதத்தையே
நிந்தைகள் நீக்கிடுவார் இழந்ததை தந்திடுவார்
சத்திய பாதையிலே நித்தமும் நடந்திடுவோம்
வெட்கப்பட்டுப் போகாமலே வெற்றிமேல் வெற்றி பெறுவோம்
வனாந்திரம் செழிப்பாகும் வாதைகள் மறந்துவிடும்
சந்தோஷம் என்றும் பொங்கும் சம்பூரணம் அடைவோம்
சீயோனின் மாந்தர்களே கெம்பீரமாய் பாடுங்கள்
சேனைகளின் கர்த்தர் என்றென்றும் நம்முடனே