azhaippin kural kaettaen என் பின்னே வா
என் பின்னே வா
அழைப்பின் குரல் கேட்டேன் – என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார் – 2
1.அறிவில் குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே – பின்னே
2.வலிமை குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
வலியவர் கொடுக்கினை வதைத்திடவே – பின்னே
3.குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் – பின்னே