• waytochurch.com logo
Song # 1670

கதிரவன் எழுகின்ற





கதிரவன் எழுகின்ற காலையில்

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

துதி செய்ய மனமே - எழுந்திராய்.




2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்

திரண்ட தயை தேவை- நாடுவேன்.




3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்

இடமதில் செல்வதே - என் இஷ்டம்.




4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை

ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்.




5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை

நேயமாய் பாடி நான் - உயர்த்துவேன்.




6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்

கர்த்தரின் செயல்களை - சிந்திப்பேன்.




7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்

தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்.




8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்

நேத்திரம்போல் என்னைக் - காக்கிறார்.


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com