• waytochurch.com logo
Song # 1672

கிஞ்சிதமும் நெஞ்சே





கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே

பல்லவி

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல

கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்

கேடகத்தைப் பிடி நீ




அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை

வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,

நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல

நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்




சரணங்கள்

1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,

பத்தியில் தெளிக்கவும், - நித்ய

ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,

திறமை அளிக்கவும்,

சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்

ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,

தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,

செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் --- கிஞ்சிதமும்




2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,

கண்டடைந்தார் பேறு? - நல்ல

தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்

தொகுத்து வெவ்வேறு

விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,

வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,

கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல

காரியங்களையும் பார் இது மா ஜெயம் --– கிஞ்சிதமும்




3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட

உன் செயல் மா பேதம் - அதின்

தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,

துணை அவர் பாதம்

ஏற்றர வணைக்கவே பணிவாக

இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,

ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த

ஆவி உதவியை மேவி, அடைந்து நீ --– கிஞ்சிதமும்


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com