ekkalamum nan thuthipen எக்காலமும் நான் துதிப்பேன்
எக்காலமும் நான் துதிப்பேன்
உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன் இதயம் பாடும் ஹாலேலுயா
1.துதிகள் மத்தியில் வாசம்
செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே
தூதர் போற்றும் தூய தூயர்
பரிசுத்தத்தை தாருமே
கைகள் தட்டி சேர்ந்து பாடி
உந்தன் நாமம் உயர்த்தவே …(2)- எக்காலமும்
ஹாலேலுயா …ஹாலேலுயா…
ஹாலேலுயா…ஆ …ஆமென்
ஹாலேலுயா…ஹாலேலுயா…
ஹாலேலுயா…ஆ …ஆமென்
2. சென்ற நாட்களில் நன்மை செய்தவர்
இந்த நாளிலும் செய்வாரே
நேற்றும் இன்றும் மாறா நேசரே
அற்புதத்தை செய்வாரே –கைகள் தட்டி …
3. தோளில் என்னை சுமந்தீரே
தாழ்வில் என்னை தேற்றினீர்
தள்ளப்பட்ட கல்லை மாற்றியே
கன்மலைமேல் உயர்த்தினீர் –கைகள் தட்டி …