• waytochurch.com logo
Song # 1679

குணப்படு பாவி





குணப்படு பாவி

பல்லவி

குணப்படு பாவி, தேவ

கோபம் வரும் மேவி - இப்போ




அனுபல்லவி

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்

காலமிருக்கையில் சீலமதாக நீ




சரணங்கள்

1. கர்த்தனை நீ மறந்தாய் - அவர்

கற்பனையைத் துறந்தாய்,

பக்தியின்மை தெரிந்தாய் - பொல்லாப்

பாவ வழி திரிந்தாய்,

புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,

உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்




2. துக்கமடையாயோ? பாவி

துயரமாகாயோ?

மிக்கப் புலம்பாயோ? - மனம்

மெலிந்துருகாயோ?

இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?

தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?




3. தாவீ தரசனைப்போல் - தன்னைத்

தாழ்த்தும் மனாசேயைப்போல்

பாவி மனுஷியைப்போல் - மனம்

பதைத்த பேதுருபோல்,

தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று

கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி




4. உன்னை நீ நம்பாதே! - இவ்

வுலகையும் நம்பாதே;

பொன்னை நீ நம்பாதே - எப்

பொருளையும் நம்பாதே;

தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்

நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com