en aantavaa maalainaeram என் ஆண்டவா சொல்லித்தாரும்
என் ஆண்டவா சொல்லித்தாரும்
1. என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சி
என் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ?
என் ஆண்டவா சொல்லித்தாரும்
தோற்றங்களின் நுட்பமெல்லாம்
என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்
காட்சி மூலம் ஏழை நெஞ்சை
2. செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்
தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும்
3. என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம்
குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்