en iyaesu raajaa saroenin roejaa என் இயேசு ராஜா சரோனின் ரோஜா
என் இயேசு ராஜா சரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும்
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிரபை முன் செல்ல அருளும்
கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா
கடலினை கண்டித்த கர்த்தர் நீர் அல்லோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும்
பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும்
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்
புரமனே என் முன் தீபமாய் வாரும்
ஏதிர் காற்றும் வீச எதிர்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
இயேசுவே யாத்திரையில் கரைசேர்க்கும் தேவன்
என் ஜீவ படகில் நங்கூரம் நீரே