en meiparai yesu என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது
என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
என்றென்றும் இன்பமல்லவா
என்னோடவர் நடந்திடும் போதினிலே
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
எங்கெங்கும் ஒளியல்லவோ
என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால்
என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுமே