enakkaga siluvaiyai sumanthavare எனக்காக சிலுவையை சுமந்தவரே
எனக்காக சிலுவையை சுமந்தவரே
உமக்காக நான் வாழுவேன்
இயேசுவே இரட்சகா தேவனே என் ஜீவனே
உமது கைகளில் ஆணி அடிக்கையில்
பிதா இவர்களை மன்னியும் என்றீரே
உம் அன்பு தான் மிக பெரியது
உம் பொறுமை தான் மிக உயர்ந்தது
பிதாவின் சித்தத்தை நிறை வேற்றிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொடங்கினீர்
உம் பாடுகள் பெரியதானதே
உம் காயங்கள் உயர்வானதே
பாவி எனக்காய் பரிசுத்தர் நீரே
பார சிலுவையை சுமந்து பலியானீர்
உம் மார்பினில் நான் சாய்ந்து தான்
அழுதிட நான் நினைக்குறேன்
உமது இரக்கத்தால் என்னை மன்னித்தீர்
உமது பாசத்தால் என்னை இரட்சித்தீர்
உம் அன்பிலே நான் என்றுமே
வாழத்தான் நான் நினைக்குறேன்