enakkoru aasai undu எனக்கொரு ஆசையுண்டு
எனக்கொரு ஆசையுண்டு
என் இயேசுவை காண வேண்டும்
எனக்கொரு ஆவல் உண்டு
நான் அவரோடு பேச வேண்டும்
வையகமே வானகமே
எனது ஆசை நிறைவேறுமா
மலையும் காடும் சோலையும்
அலைந்தோடும் கடலும் தேடினேன்
காணேன் அவரை கதறி அழுதேன்
கர்த்தரே வாரும் வாரும் என்றேன்
கரம் ஒன்று என்னைத் தொட்டது
என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது
வேதம் தந்தேன் தினமும் அதிலே
என்னை பார் என மொழிந்தது
தினமும் வேதத்தில் காண்கிறேன்
தேவாதி தேவனை துதிக்கின்றேன்
ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்