ennai kaappavar என்னை காப்பவர் மிகவும் நல்லவரே
என்னை காப்பவர் மிகவும் நல்லவரே
என்னை காப்பவர் சர்வ வல்லவரே
என்னை காப்பவர் உறங்குவதில்லையே
என்னை காப்பவர் கைவிடுவதில்லையே
என்னை காப்பவர் தள்ளாடவொட்டாரே
காத்தவர் காப்பாரே கருனையாலே
காத்தவர் காப்பாரே அன்பினாலே
பாவ சாபத்தில் சிக்கின என்னை
திரு இரத்தம் சிந்தி இரட்சித்தீரே
தேவாட்டுகுட்டி நீரே
என் பாவம் போக்கினீரே
இரட்சகர் இயேசு நீரே
வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
வழிகாட்டி என்னை மீட்டு காத்தீரே
நீர் வல்ல மீட்பரே
என் நல்ல மேய்ப்பரே
எனை வழி நடத்தும் தெய்வம் நீரே
சுகம் இல்லாமல் துன்பப்பட்டேன்
உம் வார்த்தையை அனுப்பி
என்னை வாழவைத்தீரே
என் நோய்கள் சுமந்தீரே
என் பலிகள் ஏற்றீரே
பரிகாரி கர்த்தர் நீரே
தரித்திரனாய் இருந்த என்னை
பெரும் சீமானாய் மாற்றி மகிழ்ந்தீரே
உம் துதிகள் பாடுவேன்
தினம் அகமகிழ்வேன்
ஐசுவரிய சம்மன்னர் நீரே