ennamellam ekkamellam எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
சிந்தனையெல்லாம் நீரே
என் வாஞ்சை என் தாகம்
என் நோக்கம் நீரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
மனிதர்கள் என்னை தள்ளினாலும்
சூழ்நிலையால் கலங்கினாலும்
போராட்டங்கள் எனை சூழ்ந்தாலும்
வேதனையால் வாடினாலும்
நம்பினோர் என்னை கைவிட்டாலும்
ஏமாற்றத்தால் நான் சோர்ந்திட்டாலும்