ennodu eruppavare என்னோடு இருப்பவரே இயேசுவே
என்னோடு இருப்பவரே இயேசுவே
எனக்காக வாழ்பவரே
கோடான கோடி உள்ளங்கள் தேடி
பாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே
என்னில் வாழ்வது நானுமல்ல
இயேசுவே என்னில் வாழ்கின்றீர்
கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்
கன்மலையுமானீர் – கர்த்தாவே என்
நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மில் என்னை மறந்தேனய்யா
காற்றும் கடலும் கல்மழையும்
கானம் பாடிபோற்றுமே
துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்
தூயவர் புகழ் பாடுமே
சிறகுகள் அடித்திடும் பறவையுமே
சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
நானும் சேர்ந்து துதித்திடுவேன்
சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்
சூழ்ந்து உம்மை போற்றுமே
வானிலும் பூவிலும் உள்ளவை யாவும்
வாழ்த்தி வலம் வருமே
வானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோ
வானவரே உம் மகிமையல்லோ
அல்லேலூயா அல்லேலூயா
துதி கனம் மகிமை உமக்கே