enthan anpulla aantavar aesuvae naan எந்தன் அன்புள்ள ஆண்டவர் ஏசுவே நான்
எந்தன் அன்புள்ள ஆண்டவர் ஏசுவே நான்
உந்தன் நாமத்தை போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனை பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்
ஆ! ஆனந்தம் ஆனந்தமே!
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
ஏசுவே எந்தன் ஆருயிரே
பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரே
வாக்கு மாறாதவரே – (ஆ!
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர் – (ஆ!
எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜ“வியமே – (ஆ!