enthan vaanjai uyair எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்
1. பார்க்க பதினாயிரம்
கண்கள் வேண்டுமே
பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
துதிக்கப் பதினாயிரம்
நாவு வேண்டுமே
துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே
2. மகிமை என்றும் உன்னில்
நிறைந்திருக்குமே
மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர்
சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே
3. வல்லவரைத் தன் வாழ்வில்
கொண்டு வனப்புடன் நிற்கும்
சீயோனே இயேசு
ராஜாவின் சத்திய நகரமே
சிலுவையே உந்தன் அஸ்திபாரமே
4. பரிசுத்தமே தன் எழில் எல்லையே
பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
பரலோகமே இன்ப சீயோனே
5. மணவாளன் என் இயேசு
ராஜன் அங்கே
மணவாட்டியாம் என்
மகிடிநச்சி அங்கே
ஆயத்தமாகிடும் என்னிடமே
எப்போது நீர் வந்து சேர்வீரோ?