ethai ninaithum எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே மகளே
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே மகளே
யேகோவா தேவன் உன்னை
நடத்திச் செல்வார்
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார்
சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயரப் பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
கர்த்தரை நினைத்து
மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
துணையால் எதையும் செய்திடுவாய்