immaanuvaelae vaarum vaarumae இம்மானுவேலர் வந்தார்
இம்மானுவேலர் வந்தார்
1. இம்மானுவேலே வாரும் வாருமே
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே
2. ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
பாதாள ஆழம் நின்று இரட்சியும்
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்
3. அருணோதயமே ஆ வாருமே
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே
மாந்தார ராவின் மேகம் நீக்கிடும்
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்
4. தாவீதின் திறவுகோலே வாருமே
விண் வாசலைத் திறந்து தாருமே
ஒடுக்கமாம் நல்வழி காத்திடும்
விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்
5. மா வல்ல ஆண்டவா வந்தருளும்
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்