indru varai ennai nadathinir இன்று வரை என்னை நடத்தினீர்
இன்று வரை என்னை நடத்தினீர்
இன்றுவரை என்னை தாங்கினீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
நீர் என்றென்றும் போதுமானவர்
எந்தன் பாவ பாரமெல்லாம்
உந்தன் மீது சுமந்து கொண்டீர்
எனக்காய் சிலுவை மரித்தீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
எந்தன் தேவைகள் அறிந்து
வானம் திறந்து தந்திட்டிரே
எல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
மன பாரத்தால் நான் அலைந்தேன்
மன வேதனையால் நிறைந்தேன்
மனம் உருகி நான் கதறும் போது
இயேசுவே நீர் மிக நல்லவர்
கடும் வியாதி வந்த வேளையில்
வைத்தியராகி என்னை தேற்றினீர்
கடும் வெயிலும் நல் நிழலானீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
ஒருநாளும் கைவிடீர் நீர்
ஒருநாளும் விலகிடீர் நீர்
ஒருபோதும் மறக்க மாட்டீர்
இயேசுவே நீர் உண்மையுள்ளவர்