iraivan enadhu meetpaanar இறைவன் எனது மீட்பானார்
இறைவன் எனது மீட்பானார்
அவரே எனக்கு ஒளியானார்
அவரைக் கொண்டு நான் வாழ
எவரைக்கண்டும் பயமில்லை
வாழ்வில் இறைவன் துணையானார்
வாடும் எனக்கு உயிரானார்
தீயோர் என்னை வளைத்தாலும்
தீமை அணுக விட மாட்டார் (2)
ஒன்றே இறைவா வேண்டுகிறேன்
ஒன்றே அடியேன் தேடுகிறேன்
தேவன் உமது திருமுன்னே
நாளும் வாழ அருள்வாயே (2)