ivvulaga makkalile anbu kolla vanthar இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்
இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்
அந்த இறைவனின் அன்பினையே
ருசித்துப் பாராயோ நீ ருசித்துப் பாராயோ
இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்
1. கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டான் மனிதன்
கீழ்படியாமையால் இழந்தான் கர்த்தர் சமூகந்தனை
ஆயினும் வாக்களித்தார் ரட்சகரை நமக்கே
பாருலகை மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்க
2. படைத்தார் இப்பாருலகை படைத்தே பராமரித்தார்
நாம் பாவமே செய்தாலும் அழித்திட துணியவில்லை
படைப்பின் நீதினிலே பரிவும் அன்பும் கொண்டார்
பாவத்தையே வெறுத்தார் பாவியையோ நேசித்தார்
3. இறைவன் நமக்களித்த வாக்குதத்தங்கள் எல்லாம்
கிறிஸ்துவாம் உலக ரட்சகர் ஆண்டவரில் ஆம் என்றும்
இறைவனுக்கு மகிமை உண்டாகும் படி நம்மில்
இயேசு கிறிஸ்துவினால் ஆமேன் ஆமேன் என்றேன்