iyarkaiyil uranthidum inaiyatta iraiva இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா – என்
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா – என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா –2
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா –2
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா –2