iyya umthiru namam ஐயா உம்திரு நாமம்
ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
ஐயா உம் திருநாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணுமே
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே