kanaththirkum makimaikkum paaththirarae கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)
1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே
ஆராதனை ஆராதனை (2)
2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)
3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்
ஆராதனை ஆராதனை (2)