kanikkai thanthom kanivai yerpai காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காலத்தைக் கடந்தவா இறைவா
எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா –2
கண்ணீரிலும் செந்நீரிலும்
மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) –2
காயமும் குருதியும் நிதம் காணும் –2
எம் உறவுகளைத் தருகின்றோம்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்
துன்பங்களில் வாடுகின்ற
நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) –2
நியாயமும் நீதியும் இனி நிலவ –2
எம் நிலைகளையே ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்