karthare en jeevan en belanaanavar கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்
கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்
யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்
அவரே எந்தன் ஒளியானவர்
இரட்சிப்புமானவர் அவரேயாவார்
கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் ……….
சத்துருக்களும் பகைஞர்களும்
பொல்லாங்கு செய்ய நினைதோர்களும்
என் மாம்சத்தைப் பட்சித்திட
என்னையே நெருக்கின வேளைகளில்
கர்த்தரே என் பக்கம் துணையாய் நின்று
காத்தென்னை இரட்சித்தார் மாதயவாய் (2)
கர்த்தர் என் ஜீவன்
தந்தை தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார்
என் சத்துருக்கள் வெட்கினார்கள்
கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார்
திடமனதோடு நான் காத்திருப்பேன்
ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே (2)
கர்த்தர் என் ஜீவன்