kartharukku kaanikaiyitho கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை இதோ
கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
பத்திலொன்று நான் கொடுப்பேன்
சத்தியக் கிறிஸ்து நாதர்
சபையை வர்த்திக்கவேணும்
அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்
அறிவு வளர வேணும்
தனியேக மெய்த்தேவனை நந்தேசத்தில்
சகலரும் போற்ற வேணும்
கனிவாய்ப் போதகர் வேதம்
கற்றறிந்து சொல்லவேணும்
கணக்காய் இதன் செலவு
கட்டி வரவேணும் அய்யா
ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்கு
அனைத்திலும் தந்ததையே
மா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்
வள்ளற்குச் செய்பொருத்தனையே
ஆண்டவர் பரன் அவர்கட்
கனைத்தும் ஆசீர்வதித்துத்
தாபரம் மதடி கீழ்த்
தந்தளித்த தெல்லாங் கேட்டேன்
கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை
கூடினதைக் கொண்டிதோ வந்தேன்
நஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான்
நாலாவகை வரத்திற் கொஞ்சம்
புஞ்சை பல போகத்திலும்
போட்டு வைத்தே னான்குறுணி
புத்தகக் கணக்கில் கண்ட
தித்தனை தொகையுமாச்சு