karunagara deva irangi கருணாகர தேவா இரங்கி இந்தக்
கருணாகர தேவா இரங்கி இந்தக்
கங்குலில் எனைக் காவா
இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
என்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக
சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச்
சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்து
நன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதி
நாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி
நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்து
நெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்து
சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து
தூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து
தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே என்னைத்
தாங்குவதார் பின்னை சார்வன் நின்னை
வேதா நான் உன் தொண்டு வினைஞன் என்நிலை கண்டு
மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தனைத்துக் கொண்டு
தீய எண்ணங்கள் பாற திகில் கனவுகள் மாறத்
திவ்ய சிந்தை உள் ஊற ஸ்திரம் ஏறக்
காயம் உயிரும் கூடக் கருத்துன்னோ டுறவாடக்
காலை நல்லறம் நாடக் கரிசித்துன் துதி பாட