karunai mazhaiyae mary matha கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2)
கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) –கருணை
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) –கருணை