kathiravan ezhukinra kaalaiyil இறைவனைத் துதி செய்ய எழுந்திராய்
இறைவனைத் துதி செய்ய எழுந்திராய்
1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்
2. வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை – நாடுவேன்
3. கடவுளின் வல்லமை கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என்இஷ்டம்
4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்
5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய்ப் பாடி நான் – உயர்த்துவேன்
6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன்
7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்
8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார்