kuthukalam kondaatamey குதூகலம் கொண்டாட்டமே – என்
குதூகலம் கொண்டாட்டமே – என்
இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
1.பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு,
கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால்!
2.தேவாதி தேவன் தினம்தோறும்
தங்கும் தேவாலயம் நாமே
ஆவியான தேவன்
அச்சாரமானார் அதிசயம் அதிசயமே!
3.வல்லவராம் இயேசு வாழ வைக்கும் தெய்வம்
வெற்றி மேலே வெற்றி தந்தார்
ஒரு மனமாய் கூடி ஒசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்!
4.எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
இயேசு வருகின்றார்
ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்!