maaritaa em maa naesarae அன்பு ஒருக்காலும் ஒழியாது
அன்பு ஒருக்காலும் ஒழியாது
1. மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந் நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை எதும் வேறில்லையே
2. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. – ஆ! இயேசு
3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே. – ஆ! இயேசு
4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க – ஆ! இயேசு
5. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
ப10ரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே – ஆ! இயேசு
6. பயமதை நீக்கிடும் – யாவும்
பாரினிலே சகித்திடும்
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே – ஆ! இயேசு