maaritaathoer naesa meetpar மாறிடாதோர் நேச மீட்பர் மாற்றுவார் உன் வேதனை
மாறிடாதோர் நேச மீட்பர் மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் ரோகத்தாலும் வருத்துவானேன் நம்பி வா
நம்பி வா நம்பி வா… இயேசு உன்னை அழைக்கிறார்
லோக மாந்தார் கைவிடுவார் துரோகம் கூறி தூற்றுவார்
தூயர் இயேசு மெய் நேசராய் துன்பம் தீர்ப்பார் நம்பி வா
வல்ல மீட்பர் கண்ணீர் யாவும் வற்றிப் போகச் செய்வாரே
வற்றா ஜீவ ஊற்றாய் உன்னை வருந்தி அன்பாய் அழைக்கிறார்