maasarra thuuyanal anpae இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
மாசற்ற தூயநல் அன்பே அன்பே
மாறிடா மங்கிடா அன்பே அன்பே
காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
உள்ளம் உடைக்கும் அன்பே!
1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
ஓ நல்ல தேவ அன்பே!
2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
என் உள்ளக் கறையை கழுவவோ!
ஏனையா இத்தனை என் மீது அக்கறை
ஓ நல்ல தேவ அன்பே!
3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
என்யாவும் அன்பிற்கே! என் எல்லாம் அன்பிற்கே
உள்ளம் மகிழ்கின்றேனே.