malaimel yeruvom marangalai மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
1. தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா
2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய்
அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்
3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்;
4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டைபண்ணாதே
5. சாப்பிட்டும் திருப்தியில்லை
குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம்
குளிரோ போகவில்லை