manam irankum theyvam iyaesu மனம் இரங்கும் தெய்வம் இயேசு
மனம் இரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார் (2)
யெகோவா ராபா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு இன்று தருகிறார்
மனம் இரங்கும் தெய்வம் இயேசு
1. பேதுரு வீட்டிற்குள் நுழைந்தார்
மாமி கரத்தை பிடித்துத் தூக்கினார் (2)
காய்ச்சல் உடனே நீங்கிற்று
அவள் கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (2)
யெகோவா ராபா
2. குஸ்டரோகியைக் கண்டார் இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார் (2)
சித்தமுண்டு சுத்தமாகு – என்று
சொல்லித் சுகத்தைத் தந்தார்
யெகோவா ராபா
3. நிமிர முடியாத கூனி – அன்று
இயேசு அவளைக் கண்டார் – (2)
கைகள் அவள் மேலே வைத்தார் – உடன்
நிமிர்ந்து குதிக்கச் செய்தார்
யெகோவா ராபா
4. பிறவிக் குருடன் பத்திமேயூ – அன்று
இயேசுவே இரங்கும் என்றான் – (2)
பார்வை அடைந்து மகிழ்ந்தான் – உடன்
இயேசு பின்னே நடந்தான்
யெகோவா ராபா