naan aarathikka veroru நான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லை
நான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே ஆராதிப்பேன் இயேசுவே
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை நேசிக்கும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை விசாரிக்கும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை வனைத்திடும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை உயர்த்திடும் தெய்வம்
இயற்கையின் மேல் அதிகாரம் உள்ளவர்
இரையாதே என்று கட்டளை கொடுத்தவர்
காற்றையும் கடலையும் அடக்க வல்லவர்
கடினமானதென்று ஒன்றுமில்லாதவர்
நான் துதித்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே துதிக்கின்றேன் இயேசுவே
மனிதர்கள்மேல் மனதுருக்கும் கொண்டவர்
மரித்தோரை எழுப்பி அற்புதம் செய்தவர்
மாறாத அன்பினை தந்த மன்னவர்
மாந்தர்கள் பணிந்திட என்றும் தகுந்தவர்
நான் பணிந்திடவேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே பணிகின்றேன் இயேசுவே
ஊழியத்தில் அபிஷேகம் தந்தவர்
கிருபைகள் தந்து உயர்த்தி வைத்தவர்
பரிசுத்த வல்லமை பெருகச் செய்தவர்
ஆவியின் வரங்களால் இன்றும் நிறைப்பவர்
நான் உயர்த்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே உயர்த்துவேன் இயேசுவே