naan nallavan illai நான் நல்லவன் இல்லை ஆண்டவரே
நான் நல்லவன் இல்லை ஆண்டவரே
என்னில் நன்மை இல்லை பெரியாவரே
நான் நல்லவள் இல்லை ஆண்டவரே
என்னில் நன்மை இல்லை பெரியாவரே
விழுந்து போன பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
விலகாமல் காத்தீரையா – என்னை
ஒதுக்கப்பட்ட பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
ஓயாமல் நேசித்தீரையா
தீட்டுப்பட்ட என் வாழ்வை நீர் பார்த்துமே
என்னை தீமையாய் நிலைக்கவில்லையே
அசுத்தமான என் உள்ளம் நீர் மாற்றவே
பரிசுத்தாவி தந்தீரையா
உலகத்தை நேசித்து நான் வாழ்ந்தேனே
நேசிக்க யாருமில்லையே – என்னை
உடைக்கப்பட்டு உணர்ந்து நானும் திரும்பி பார்க்கையில்
கண்ணீரோடு காத்திருந்தீரே – எனக்காய்
நான் நல்லவன் இல்லை என்றாலும் இயேசுவே
என்னை நேசிக்கும் நீர்தானே பெரியாவரே
என்னில் நன்மை இல்லை என்றாலும் இயேசுவே
என்னை நேசிக்கும் நீர்தானே சிறந்தவரே