naan paada varuveeraiyaa நான் பாட வருவீரையா
நான் பாட வருவீரையா
நான் போற்ற மகிழ்வீரையா
என் வாழ்விலே வந்தீரையா
புது வாழ்வு தந்தீரையா
தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே
இமைபொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்