naan paavach setrinaley vaazhnthen நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா
பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே
என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும்
கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார்
2.என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர்
எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம்
இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே
3.கார்மேகம் போல்
என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே
மூழ்கியே தள்ளும் சமுத்திர
ஆழம் தூக்கி எறிந்தாரே
4.இரத்தாம்பரம் பொன் சிவப்பான
இதய பாவங்களை
பஞ்சையும் போலவே
வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்
5.மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
எந்தன் பாவங்கள் அத்தனை
தூரம் இயேசு விலக்கினார்
6.நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
நான் மறுபடியும் பிறந்தேன்
தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக
தேடிக்கொண்டேன் பாக்யம்
7.அங்கேயும் சீயோன்
மலைமீதே ஆனந்தகீதங்களே
ஆயிரம் ஆயிரம் தூதர்கள்
சூழ அன்பரை பாடிடுவேன்