naanae vaaninintru irangi vantha நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (2)
எனது உணவை உண்ணும் எவரும்
பசியை அறிந்திடார் (2) –என்றும்
எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்
அழிந்து போகும் உணவிற்காக
உழைத்திட வேண்டாம் (2) –என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்