naankal aaraathikkum enkal thaevan நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்
சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம் – நாங்கள்
1.எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
சேதம் வராமல் காத்திடவே -2
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்
2.நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே- 2
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்
3.மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே – 2
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே
4.சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
இராஜாதி இராஜா வருகின்றாரே – 2
மேகங்களுடனே வருகின்றாரே