nadaka solli thaarum நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்
1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே
2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே