nalla devane nyana நல்ல தேவனே ஞான ஜீவனே
நல்ல தேவனே ஞான ஜீவனே
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்
போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே
அன்பாய்க் காத்தீரே
காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச்
சார்ந்து கொள்ளுவேன்
சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப்போக்கி
இலங்கப் பண்ணுமே
இன்று நானுமே இன்பமாகவே
உன்றன் வழியில் நடக்கக் கருணை
உதவவேணுமே
ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்றும் நடக்க ஆவி
ஈந்தருளுமே
கையைக் காவுமே கண்ணைக் காவுமே
மெய்யைக் காத்து என்றன் மனதை
மிகவும் காவுமே