nampivanthen mesaiyaa நம்பிவந்தேன் மேசையா நான்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே; திவ்ய
சரணம்!þசரணம்! சரணமையா, நான்
நம்பிவந்தேனே
1. தம்பிரான் ஒருவனே தஞ்சமே
தருவனே – வரு
தாவீது குமரகுரு பரமனுவேலே,
நம்பி வந்தேனே – நான்
2. நின்பாத தரிசனம் அன்பான
கரிசனம் – நித
நிதசரி தொழுவதிதம் என
உறுதியில் நம்பிவந்தேனே – நான்
3. நாதனே கிருபைகூர், வேதனே,
சிறுமைதீர் – அதி
நலம் மிகு உனதிரு திருஅடி
அருளே, நம்பிவந்தேனே – நான்
4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே; கன
பரிவுடன் அருள்புரி, அகல
விடாதே; நம்பிவந்தேனே
5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே; உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த, நம்பிவந்தேனே!