nanti sellaamal irukkavae mutiyaathu நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் — நன்றி
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீரைய்யா
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
வாழ வைத்தீரையா — நன்றி
3. தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் — நன்றி